10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு!

Friday 28 December 2012 0 comments
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பணிகளை வரும் ஜனவரி-4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, எந்த மொழிகளில் தேர்வை எழுதுகின்றனர் என்ற விவரங்களை, ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் சரிபார்க்க வேண்டும். என்றும்.  மாணவர்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை, "அப்லோட்' செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்ட் கொடுக்கப் பட்டுள்ளது, அதை பயன்படுத்தி, மேற்கண்ட விவரங்களை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்து கொள்ளவும், வழி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறினார்.


நன்றி: இந்நேரம்.காம்

0 comments:

Post a Comment

 

©Copyright 2013 . | TZRONLINE