அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று அஞ்சல் துறை (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை மற்றும் கோவை ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான அனுமதி கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி கடிதங்களை இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment